வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்கல்!

8ed
8ed

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் நிமித்தம் வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்கும் நடைமுறை நாடு பூராகவும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தற்போதைய அறிவுறுத்தலின்படி, வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்கல் செயன்முறையானது 2020.05.11ம் திகதி திங்கட்கிழமை இன்று முதல் கல்முனை பிரதேச செயலக காரியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏற்கனவே உள்ள வழமையான நடைமுறைகளுக்கமைவாக வேலை நாட்களில் மு.ப. 9 மணி முதல் பி.ப. 3 வரையும் பொது மக்கள் தங்களது வாகன வருமான உத்தரவுப்பத்திரங்களை கல்முனை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

பிரதேச செயலகத்திற்கு சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் பொது மக்கள் முகக் கவசம் அணிதல், கைகளை நன்கு கழுவிக் கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணி நடத்தல் போன்ற வழக்கமான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பேணிக்கொள்ள வேண்டும் என கல்முனை
பிரதேச செயலாளர், MM.நஸீர்கேட்டுக்கொண்டுள்ளார்.