தேர்தல் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழைப்பு

ELection Dep
ELection Dep

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள அனைத்து வேட்பாளர்களையும் நாளை (Oct.06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை பிற்பகல் 2.30 க்கு குறித்த வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுதினம் (07) இடம்பெறவுள்ள நிலையில், அது தொடர்பில் தௌிவுபடுத்துவற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.