வவுனியாவில் தீ விபத்து பொலிஸார் விசாரணை!

1 4
1 4

ஊரடங்கு அமுலில் உள்ள போது வவுனியா, காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம், திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையத்தில் நேற்று இரவு (8) மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் உரிமையாளர் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் வியாபாரநிலையத்திலிருந்து புகை வெளிவந்துள்ளது. அதனை அவதானித்த அயலவர்கள் வர்த்தக நிலையத்திற்கருகில் சென்று பார்த்தபோது வர்த்தக நிலையம் தீப்பற்றியெரிந்து கொண்டிருந்துள்ளது.

தீயை உடனடியாக அணைக்க முற்பட்டதுடன் நகரசபையின் தீயணைப்புப் பிரவினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

வியாபாரநிலையம் முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததனால் கடையினுள் இருந்த சுமார் பத்து இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் மின் ஒழுக்கினாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .