கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் வேலை இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.
வளாகத்தை அழகுபடுத்தும் திட்டத்தை முன்னிட்டு மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ. ரக்கீப் ஆலோசனையின்படி முதற்கட்டமாக மாநகர வளாகத்தின் இருமருங்கிலும் மரங்கள் நடப்பட்டன.
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி அன்சார் நிகழ்வில் கலந்து கொண்டு திட்டதை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.