முள்ளிவாய்க்கால் சென்ற விக்னேஸ்வரனுக்கு தடைபோட்ட காவல்துறை!

IMG 20200518 WA0013
IMG 20200518 WA0013

படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த முள்ளிவாய்க்கால் சென்ற தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரால் தடுக்கப்பட்டார்.

இன்று காலை ஆறு மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்கால் சென்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்டோரே சங்குப் பிட்டி பாலத்தடியில் தடுத்து முள்ளிவாய்க்கால் செல்ல முடியாது என திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக தடுத்து வைத்திருந்த படையினர், மேலிடத்து உத்தரவின் பெயரில் அனுமதிக்க முடியாது எனக் கூறியே திருப்பி அனுப்பினர்.

திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியினர் செம்மணியில் அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் அருந்தவபாலன் தெரிவித்தார்.