தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஆபிரகாம் சுமந்திரன் அண்மையில் சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்திவிட்டார் என பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்களும் கண்டனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதாமகவே கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களில் வேண்டாம் சுமந்திரன் எனும் தலைப்பில், தமிழர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரனை தோற்கடிப்போம் எனவும் பதவியைப் பறி என்ற தலைப்பில் தமிழர்களின் தியாகங்களை ஏற்கமறுக்கும் சுமந்திரனின் பதவியைப்பறி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த துண்டுப் பிரசுரத்தின் கீழே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கிளிநொச்சி மக்கள் எனவும் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.