கடந்த சனிக்கிழமை(Oct.5) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வைத்து உயர் தரம் கல்விபயிலும் 18 வயதுடைய பாடசாலை மாணவன் போதை மாத்திரைகுளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதமுனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட மாணவனிடமிருந்து 1050 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவனை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாரு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.