கடந்த மாதம் காணாமல் போன மீனவர்களும் படகும் கண்டுபிடிப்பு!

sea
sea

கடந்த 18.09.2019 ம் திகதி காணாமல் போன சாய்ந்தமருது மாளிகைகாடு மற்றும் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களும் இயந்திரப் படகும் தற்போது திருகோணமலையிலிருந்து 154 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தியக் கடல் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படகு கடற்றொழில் அமைச்சின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு சட்டலைட் ஊடாக இனங்காணப்பட்டதாகவும் தங்காலை தெகுந்துர பிரதேசத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் படகினையும் மீனவர்களையும் தற்போது கரைக்குக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை ஊருக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை மீனவ சங்கங்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.