பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று லாகூரில் நடைபெற்றது
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக பானுக ராஜபக்ஷ 77 ஓட்டங்களையும், ஷெஹான் ஜெயசூரிய 34 ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
183 ஒட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இமாமத் வசிம் 47 ஓட்டங்களையும், அசிப் அலி 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பாக நுவான் பிரதீப் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களையும், ஹசரங்க 38 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
பானுக ராஜபக்ஷ ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றின் மூலம் T20 தொடரானது 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை (Oct.09) நடைபெறவுள்ளது.