புத்தளம் பகுதியில் வெடிப்புச் சம்பவம்

puttalam
puttalam

புத்தளம், அருவக்காலு குப்பை மேட்டில் நேற்று இரவு திடீர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக அண்மையில் வாழும் மக்கள் கடும் அச்சமடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 8 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பினால், யாருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனினும், அங்கிருந்த பணியாளர்கள் அவ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

எதனால் வெடிப்பு ஏற்பட்டது என்பதை தற்போது உறுதியாக கூற முடியாதென கழிவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பிலிருந்து அருவாக்காட்டு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிக்கொண்டு அசன்ற 29 குப்பை டிப்பர்கள் ஜா-எல பகுதியில் வைத்து, கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.