உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிரமதானம்

1nt2
1nt2

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று முகாம் பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ.மதுரங்க தலைமையில் முகாமை அண்டிய பகுதிகளில் நடைபெற்றது.

இதன்போது கோவில்கள், வடிகான்கள், வீதியோரங்கள் போன்ற இடங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகளை அதிரடிப்படை வீரர்கள் அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தினர்.