ஓய்வுபெற்றோரின் தன்னலமற்ற சேவைக்கான பாராட்டு

RANIL
RANIL

கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்ற தேசிய ஓய்வூதியக் கொடுப்பனவு நிகழ்விலே நாட்டின் அபிவிருத்திக்காக ஓய்வுபெற்றோர் செய்த தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் பாராட்டி கௌரவிக்கும் விதமாக ஒக்டோபர் 08 ஆம் திகதி ஓய்வுபெற்றோர் தினம் கொண்டாடப்படுகின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுலில் உள்ள ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் 7.5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். இவ்வாறான நிலையை உருவாக்குவதற்கென நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார். தனியார் துறையை கட்டியெழுப்புவதற்காக 500 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. இந்த முதலீடுகளின் நன்மைகள் ஓய்வூதியம் பெறுவோருக்கும் கிடைக்கும்.

ஓய்வு பெற்றோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்புச் சேவை அரச பொறிமுறையை பாதுகாக்க பெரிதும் உதவியுள்ளது. நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம், 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் மற்றும் 1977, 1988 ஃ 1989 ஆகிய காலப்பகுதிகளில் இடம்பெற்ற கலகங்களின்போது ஓய்வுபெற்றோரில் பலர் தமது உயிர்களைத் துறந்தனர். பலர் வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரினதும் தன்னலமற்ற சேவைக்காக நான் அவர்களுக்கு நன்றிகூற விரும்புகிறேன் என்றும் பிரதமர் தெரிவித்தார். மகாவலித் திட்டம், கோட்டே நிர்வாக நகரம் மற்றும் நாடளாவிய ரீதியில் தண்ணீர் மற்றும் மின்சர இணைப்புகளை வழங்குவதில் ஓய்வுபெற்றோர் பாரிய பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்.

அத்துடன் யுத்தத்தின் பின்னர் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இவர்கள் பெரும் பங்களிப்பு செய்தனர். கடந்த 5 வருடங்களில் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஓய்வூதிய முரண்பாடுகளை எம்மால் சீர்செய்ய முடிந்துள்ளது. மொத்தத்தில் 85 சதவீத ஓய்வூதிய முரண்பாடுகள் இப்போது சீர் செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.