யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு மூவர் படுகாயம்!

images 2 1
images 2 1

யாழ்.கொடிகாமம் வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மொட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. மேலும் இத்தாக்குதலில் கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த சுரேந்திரன் வெனிஸ்ரன் (19-வயது),

வெனிஸ்ரனின் தந்தை வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.