கஜ முத்துக்களுடன் இருவர் கைது

.jpg
.jpg

சாய்ந்தமருதில் கஜ முத்துக்கள் அடங்கிய பொதியுடன் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி, 39 வயதுடைய மீரா முகைதீன் முகமட் சலீம் ஆகியோர் 3 முத்துக்களுடன் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஜமுத்துக்களின் பெறுமதி 1 கோடி 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.