இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்சவின் வேட்பு மனுவினை நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயற்பட்டவரே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமற்றது எனவும் அதன் உறுப்பினர் ரட்ணஜீவன் இனவாதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரட்ணஜீவனுக்கு அரசியல் பிடித்திருக்கலாம் ஆனால் தீர்மானங்கள் எடுக்க முடியாது எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.