இலங்கை காவல்துறையினரின் கொடூர முடிவு!

2 4
2 4

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவருக்கு ஆதரவாக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் கைவிடப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காததை அடுத்து இதில் கலந்து கொள்ள வந்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை காவல்துறையினர் பெண் ஒருவரை கைது செய்து ஜீப் வண்டியில் தூக்கிப்போடும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவரை கைது செய்யும் போது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது. ஆனால் இங்கு பல காவல்துறை உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணை வழுக்கட்டாயமாக தூக்கி ஜீப் வண்டிக்குள் வீசியுள்ளனர்.

அதே வேளை பல பெண்கள் இதில் தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்மணி ஒருவர் கீழே விழுந்து கிடப்பதையும், அவருக்கு முதலுதவிகள் செய்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இது தொடர்பான காணொளிதற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.