ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 171 பேர் பலி

9oad 4
9oad 4

கொரோனா பாதிப்பு அதிகரித்து ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 8,595 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 171 பேர் பலியாகினர். இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையிலும், பிரேசில் 2 வது இடத்திலும், அதிக பாதிப்புகளுடன் ரஷ்யா 3 வது இடத்திலும் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றுக்கு 8,595 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,85,283 ஆக அதிகரித்துள்ளது.


அதிகரிக்கும் நோய் தொற்றுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் 171 பேர் பலியாகினர். இதையொட்டி மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 6,142 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் 2,42,397 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.