சட்டவிரோத மணல் அகழ்வு 10 பேர் கைது !

5 hh 1
5 hh 1

திருகோணமலை கங்கைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட பத்து பேரை கந்தளாய் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பத்து டிப்பர் வாகனங்களில் மணல் அகழ்வில் ஈடுபட்ட போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய டிப்பர் வாகனங்கள் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு,சந்தேக நபர்கள் பத்து பேரையும் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.