மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்- வைத்தியர் குணசிங்கம் சுகுணன்!

.சுகுணன்
.சுகுணன்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று நோய்க்கு அடுத்த படியாக டெங்கு மற்றும் எலிக்காய்சல் நோய் தற்போது பரவிவருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் வழிகாட்டலுக்கு அமைய விசேட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் விழிப்புடன் செயற்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (10.06.2020) அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பானர் வைத்தியர் ஜி.சுகுணன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.