போக்குவரத்து திணைக்கள வேலைகள் சனி, ஞாயிறு தினங்களிலும் நடக்கும் !

5 s
5 s

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகளை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன பதிவுகள், சாரதி அனுமதி பத்திரங்கள் ஆகியவற்றுக்கான கோரிக்கை அதிகரித்துள்ளமையினால் விடுமுறை தினங்களிலும், அலுவலக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் திணைக்கள ஆணையாளர் நாயகம் சுனித் அழகக் கோன் தெரிவித்தார்.

திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், கம்பஹாவில் உள்ள கிளை அலுவலகத்திலும் சாரதி அனுமதிப்பத்திரம், வாகன பதிவுகள் ஆகியவற்றின் கோரிக்கை அதிகரித்துள்ளன. இதனை சமாளிக்கும் வகையிலேயே விடுமுறை தினங்களிலும் அலுவலகங்களை திறந்து வைக்க தீர்மானித்திருப்பதாக மோட்டார் வானக போதுக்குவரதது ஆணையாளர் தெரிவித்தார்.

கொவிட்ட – 19 வரைஸ் பரவல் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.