சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்று வருகின்றன.
மாறிவரும் உலகில் இளைஞர்களுக்கான உளநலம் என்னும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் உளநலம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் மாபெரும் நடைபவனியொன்று மட்டக்களப்பு கோட்டைமுனை சந்தியில் இருந்து காந்திபூங்கா வரையில் முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நடைபவனியில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் ரி.கடம்பநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது காந்திபூங்காவில் விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் விழிப்புணர்வு நாடகமும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.