அம்பாறை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்களை துப்புரவு செய்யும் பணிகளுடன் தொழுகை ஆரம்பம்

IMG20200612122135 01 scaled
IMG20200612122135 01 scaled

கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட  பள்ளிவாசல்களை துப்புரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன .

 அரசாங்கம் மத தலங்களை நிபந்தனைகளோடு  திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் மூடப்பட்டுக் கிடந்த பள்ளிவாசல்களை சுத்தம் செய்யும் பணிகள்  தற்போது இடம்பெற்று வருகின்றன .
  அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட  நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட சாளம்பைக்கேணி 5 சாளம்பைக்கேணி 4 கிராம சேவை பிரிவில்  அமைந்துள்ள பள்ளிவாசல்களை அப்பகுதி இளைஞர்கள் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள்  சேர்ந்து  வெள்ளிக்கிழமை  ( 12 ) சிரமதானம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

மேலும்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள மருதமுனை கல்முனை நற்பிட்டிமுனை சாய்ந்தமருது மாளிகைக்காடு சம்மாந்துறை நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் குறித்த சிரமதான நடவடிக்கையினை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கண்காணித்து ஆலோசனை வழங்கி வருவதனை காண முடிந்தது.