உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புயவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

easter attack 0
easter attack 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புடைய 64 சந்தேகநபர்களையும் இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று (Oct.10) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.