இந்தியாவிற்கு 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்கின்ற சீன அதிபர் நாளை காரிலேயே சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னையை முழுமையாக சுற்றிப்பார்த்தபடி சீன அதிபர் இரண்டு நாள் காரில் பயணம் மேற்கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது இந்தியா-சீனா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாவே நாளை மற்றும் நாளை மறு நாள் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.