காரைதீவு மீனவர் மரணம்

karaitivu
karaitivu

காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்று காணாமல்போன சாய்ந்தமருது, காரைதீவைச் சேர்ந்த மூன்று மீனவர்களில் 47 வயதுடைய காரைதீவைச் சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன் என்ற மீனவர் மரணமடைந்துள்ளார்.

இவர் கடலுக்குச் சென்று 10ஆவது நாளில் அதாவது 28ஆம் திகதி மரணித்துள்ளாரெனவும் ஆறு நாள்களின் பின்னர் சடலத்தைக் கடலுக்குள் போட்டதாகவும் சக மீனவர்களான சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனி முகம்மது ஜூனைதீன், இஸ்மாலெவ்வை ஹரீஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.

அந்த இரு மீனவர்களும் சிகிச்சைக்காக, திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை சொந்த ஊரான சாய்ந்தமருதுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை இந்த இரு மீனவர்களது அலைபேசி உள்ளிட்ட பொருள்கள் விசாரணையின் பொருட்டு தம்வசம் வைத்திருப்பதாகக் கூறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேற்படி மீனவர்கள் சென்ற இயந்திரப்படகு சர்வதேசக் கடற்பரப்பில் 21 நாள்களின் பின்னர் நேற்று முன்தினம் (Oct.08) மாலை தென்பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.