நாட்டின் கொரோன வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட வெலிசறை கடற்படை முகாமை எதிர்வரும் தினத்தில் திறப்பது குறித்து எதிர்பார்த்துள்ளதாக
கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதார வழிமுறைகளுக்கமைய முகாம் திறக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட கடற்படை சிப்பாய்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை (740) ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் (153) கடற்படை சிப்பாய் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதேநேரம், கொரோனா வைரஸ் காரணமாக நேபாளத்தில் சிக்கியிருந்த 34 இலங்கையர் காத்மண்டு நகரில் இருந்து இன்று (16) காலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் நேபாளத்திட்கு உயர்கல்விக்காக சென்றிருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.