மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஊடாக வைரஸ் பரவுமா? அனில்

Allowed to Do PCR Test in Private Hospitals With Strict Conditions Anil Jasinghe
Allowed to Do PCR Test in Private Hospitals With Strict Conditions Anil Jasinghe

கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் அதன் பாதிப்புக்கு உள்ளானவரால் கொரோனா வைரஸ் தொற்று பரவாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார். 

அனுராதபுரம், கெபிட்டிக்கொல்லாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் மீண்டும் அவ் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். 

வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையல்ல, என்றும் இப்படி பல சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் அனில் ஜயசிங்க கூறினார். 

தொற்றாளரின் உடலில் இறந்த வைரசுகளே காணப்படும் என்றும் அவரிடமிருந்து ஏனையவர்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பெண்ணுக்கு மீளவும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டமை குறித்த செய்தி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையிலேயே சுகாதாரப் பணிப்பாளர் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.