வடமராட்சிக் கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து கவனயீர்ப்பு பேராட்டம் இடம் பெற்றது

IMG 1928

வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பகுதியில் மணல் அகழ்வதற்கு உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து இன்று காலை கவனயீர்ப்பு பேராட்டம் இடம் பெற்றது. வடமராட்சிக் கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 40 மேற்பட்டபாரவூர்த்திகளுக்கு திடீரென மணல் அகழ்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பாரவூர்த்தி சங்கத்தின் சில வாகனங்களுக்கு அரசியல் கட்சி சார்பாக பாரவூர்த்திகளுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமக்கான அனுமதியை வழங்கக்கோரியதுடன் மணல் அகழ்வில் ஈடுபட்ட பாரவூர்த்திகளை இடை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.