பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய சஜித் பிரேரமதாச

sajith 3
sajith 3

தனது உரைகளில் எந்த விதத்திலாவது ´ஸ்ரீ முகம்´ என தெரிவித்திருந்தால் அதற்காக மகாசங்கத்தினரிடமும், பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ´ஸ்ரீ முகம்´ என அமைச்சர் சஜித் கூறிய வார்த்தை எதிர்தரப்பினரின் மேடைகளில் பெரும் பேசுபொருளாக மாறியிருந்த நிலையிலேயே இவ்வாறு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

கொழும்பு – காலி முகத்திடலில் நேற்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தன்னால் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக பொது மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.