இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்களுக்கு வழங்க முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட தீர்வினை ஒருபோதும் வழங்க முடியாது என்றும் பொதுக்காரணிகளின் நிமித்தமே தீர்வு வழங்க முடியும் என்றும் கூறினார்.
இதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமது கட்சி அமோக வெற்றி பெறும் என்ற போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு குறித்த நிலைப்பாட்டடை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பை காட்டியே தேர்தலில் வெல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்வதாக கூறிய அவர், முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதமாக அரசியலமைப்பை திருத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
நாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தும் தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்துவதாகவும் அதனை ஒருபோதும் செயற்படுத்த முடியாது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய மேலும் குறிப்பிட்டார்.