தற்போது காணிகள் எவற்றையும் விடுவிக்க மாட்டோம்! யாழ் கட்டளைத் தளபதி

jaffna land
jaffna land

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கக்கூடிய காணிகளை தாம் விடுவித்துள்ளதாக யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

காணிவிடுவிப்பு தொடர்பில் ஆராய்ந்து வருகின்ற போதிலும் தற்போது காணிகள் எவற்றையும் விடுவிக்கும் திட்டம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே யாழ் மாவட்ட இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெளிவாகவும் அக்கறையாகவும் ஆராய்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறுகிய காலப் பகுதிக்குள்ளேயே மூன்று தடைவைகள் யாழ்ப்பாணத்திற்கு அவர் விஜயம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்தக் கலந்துரையாடல்களின் போது, காணி விடுவிப்பு தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை என்றும் தற்போதைக்கு காணி விடுவிப்பு ஏதும் இடம்பெறாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.