நிலத்தடி நீர் வழங்கும் குழாயில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை ஹம்பாந்தோட்டையின்பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய வீரகெட்டிய, வலஸ்முல்ல, மெதமுலன,மருதவெல,பதிகம,முல்கிரிகல மற்றும் ஹொரேவெல அகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.