நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் விபரம்

unnamed 8

இலங்கையில் நேற்றைய தினம் 22 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரை 1946 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 1421 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகியதாக இனம் காணப்பட்ட 22 பேரில் 18 பேர் டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏனையவர்களுள் கட்டாரில் இருந்து வருகை தந்த இருவர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் ரஷ்யாவில் இருந்து வருகை தந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.