இராணுவ அதிகாரிகள் 71 பேருக்கு பதவியுயர்வு

1592631144 army 2

இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் கேர்னல் பதவியில் இருந்த 41அதிகாரிகள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனரென இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, லுதினன் கேர்னல் பதவியில் இருந்த 30பேர், கேர்னல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் குறித்த பதவியுயர்வு அமுலுக்கு வரும் எனவும் இராணுவ ஊடக பேச்சாளர்   தெரிவித்துள்ளார்.