கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இந்நாட்டிற்கு வர முடியாமல் இந்தியா – மகாராஷ்டிரா மாநிலத்தில் மற்றும் தமிழ்நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பியுள்ளனர்.
ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானங்கள் இரண்டில் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனார்.
தமிழ்நாட்டில் தங்கியிருந்த 150 இலங்கையர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியிருந்த 44 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இங்கிலாந்தில் தங்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர்.
இவர்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனார்.
இரு நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களும் விமான நிலைய வளாகத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.