போர்க்குற்றவாளிகளின் பெயர் பட்டியலை விமான நிலையங்களுக்கு அனுப்பிய யஸ்மின் சூகா!

jasmin
jasmin

விமானப்படையினரை தவிர இராணுவம், கடற்படையின் விசேட படைப்பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றவியல் விசாரணைப் பிரிவு, பொலிஸ் என பாதுகாப்பு துறையின் 150க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போர் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வெளிநாடு சென்றால், கைது செய்யப்படும் ஆபத்து இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரியும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூகா, சுவிஸர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்ரியா, இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் போலடிக் நாடுகளின் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சர்வதேச சட்டத்திற்கு அமைய இவர்களை கைது செய்யுமாறும் சூகா கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செய்யத் அல் ஹூசைன் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

இந்த பெயர் பட்டியலில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் 61 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளுக்கு எதிராக யஸ்மின் சூகா, 76 விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.