- தேசப்பிரிய இன்று அறிவிப்பு
எதிர்வரும் ஆக்ஸ்ட் (05)ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் மறுநாள் (06)ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இன்று காலை கண்டி மாவட்ட செயலகத்துக்குச் சென்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பொதுத் தேர்தலுக்காக முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன் பின்னரே ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார்.