உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு இலவச முக்குக்கண்ணாடி

eye test
eye test

உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் கண் நோயாளர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்குவதற்கான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தேசிய கண் வைத்தியசாலையில் இது வரை செயற்படாதிருந்த மூக்குக் கண்ணாடி தயாரிக்கும் மத்திய நிலையம் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய கண் வைத்தியசாலையும், சுகாதார அமைச்சும் இணைந்து உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பாதயாத்திரை நேற்றைய தினம் இடம்பெற்றது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இலங்கை கண் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மற்றும் விஷன் 2020 நிகழ்ச்சித் திட்டத்தின் ஒத்துளைப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கண் வைத்தியசாலையில் இடம்பெற்ற கண்ணில் வெள்ளை படர்தல் தொடர்பான பரிசோதனையில் இனங்காணப்பட்ட நோயாளிகளுக்கு வெள்ளை படர்வதை அகற்றும் சத்திர சிகிச்சை அடுத்த மாதம் 24ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.