உடனடியாக உயர்தரப்பரீட்சை நடத்தப்படும் தினத்தை அறிவிக்குமாறு கோரிக்கை!

z new350
z new350

நாட்டின் கொரோனா வைரஸ் காரணமாக பிற்போடப்பட்டுள்ள கல்விபொது தராதர உயர்தர பரீட்சை நடத்தப்படும் தினம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமையினால் மாணவர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக நாட்டின் ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த பரீட்சையினை முன்னர் அறிவிக்கப்பட்டதை போன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் (07) ஆம் திகதி நடத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சரினால் பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்த அறிவிப்பை பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் வரும் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

இவ்வாறு பரீட்சை திகதியை அறிவிப்பதற்கு எடுக்கும் கால தாமதம் காரணமாக மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே உடனடியாக உயர்தரப்பரீட்சை நடத்தப்படும் தினத்தை அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.