இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று யாழ். கைதடியில் இடம்பெற்றது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் உதவி பணிப்பாளர் கு.நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சிறப்பு விருந்தினராக யாழ் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கெளரவ விருந்தினராக யாழ் பிரதேச செயலாளர் சா. சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் வைபவத்தில் 228 பேருக்கு தொழிற்பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.