நீர்வீழ்ச்சியில் உயிரை பறிகொடுத்த ரஜீவன்

DiMIPAlX0AE2Fg9

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த இளைஞன் மேலும் 20 பேருடன் நேற்று (21) சுற்றுலா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சிலருடன் நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் திடீரென நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த இளைஞனை மீட்டு வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான். நுவரெலியா பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தம்பிதுரை ரஜீவன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.