திட்டமிடப்பட்ட குற்றங்களை புறியும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என காவல் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
காவல் துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று (22) காலையுடன் நிறைவடைந்த கடந்த (24) மணித்தியாலங்களில் இவ்வாறான (06) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 02 சந்தேக நபர்களும் ஹங்வெல்ல பகுதியை சேர்ந்த மூவரும் இரத்மலானை பகுதியை சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.