தாக்கல் செய்த மனுவை விசாரணைகள் இன்றி நீதிமன்றம் நிராகரித்துள்ளது!

court
court

நாட்டில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக நான்கு மாவட்டங்களுக்கு வழங்கிய வேட்புமனுக்களை நிராகரித்தமை தொடர்பில் அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மனுவை விசாரணைகள் இன்றி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஏ.எச்.எம் நவாஸ் மற்றும் நீதியரசர் சோபித்த ராஜகருணா முன்னிலையில் இந்த மனு இன்று எடுத்துக்கொள்ளபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எமது மக்கள் கட்சியின் கீழ் அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு, களுத்துறை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.