காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிங் ஓயாவில் நீராட சென்ற 13 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மீஎல்ல, ஹக்மன பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் உறவினர் வீட்டிற்கு சென்று நீராட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.