இன்று காலை (9) மணிக்கு ஆரம்பித்த மாதிரி வாகனம் நடவடிக்கை மாலை (4.30) மணியளவில் நிறைவடைந்ததாக தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
யாழ் மாவட்டத்தில் மாதிரி வாக்கெண்ணும்நடவடிக்கை இன்று ஒத்திகையாக செய்து பார்க்கப்பட்டது.
யாழ் மாவட்ட வாக்குச் சீட்டின் நீளம் (23) அங்குலங்கள் அதன் அடிப்படையிலே சராசரியாக இன்று நாங்கள் (6000) வாக்குச் சீட்டுக்களை கணக்கெடுத்து அதற்குரிய சுகாதார நடைமுறைகளை எவ்வாறு பின்பற்றி அதனை கணக்கெடுப்பது அதே போல் எவ்வளவு நேரம் மற்றும் சுகாதார நடைமுறையினைபின்பற்றி உத்தியோகத்தர் எவ்வாறு பணியாற்றி கொள்ள வேண்டும். போன்ற பல விடயங்களை அவதானித்து இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது காலை (9) மணிக்கு ஆரம்பித்த கணக்கெடுப்பு மாலை (4.30) மணிவரை இடம்பெற்றது எங்களுடைய எதிர்பார்ப்பின் அடிப்படையிலே நாங்கள் இந்த மாதிரி வாக்கு சீட்டுனையும் அதேபோன்று கடந்த காலங்களிலே எங்களுக்கு கிடைத்த சில அனுபவங்களின் அடிப்படையில் இந்த வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டு இன்றைய தினம் அதனை வெற்றிகரமாக எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது அதன் அடிப்படையில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல் சுகாதார நடைமுறையை பின்பற்ற வேண்டிய கடப்பாடு இங்கே முக்கியமாக காணப்படுகின்றது அந்த வகையில் சுகாதார நடைமுறைக்கேற்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறித்த வாக்குச்சீட்டு என்னும் பணியினை மேற்கொண்டுள்ளோம் என அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.