அரசியலமைப்பு சபையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது!

1575886614 Parliament 2
1575886614 Parliament 2

இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையில் காணப்படும் உறுப்பினர் இடைவெளிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட இருவர் தொடர்பில் நாளை (24) அரசியலமைப்பு சபையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பு சபையானது அதன் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளைய தினம் கூடவுள்ளது.

மாலை 6 மணிக்கு முன்னாள் சபாநாயகரின் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதோடு, இதில் பிரதமர் உள்ளிட்ட அரசியலமைப்புச் சபையின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.