காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது!

unnamed 8 1
unnamed 8 1

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆழ்கடல் மற்றும் கடல் பிராந்தியங்களில் எதிர்வரும் (24) மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு (70) முதல் (80) கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் தினங்களில் மேல், வடமேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழைபெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த நிலையம் மேலும் அறிவித்துள்ளது.