நாட்டின் மினுவங்கொட பகுதியில் தனியார் வங்கியொன்றில் போதைப்பொருள் வியாபாரத்தின் ஊடாக பெறப்பட்ட 120 மில்லியன் ரூபா வைப்புச்செய்யப்பட்ட கணக்கு தொடர்பில் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
காவல் துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
பணமோசடி சட்டத்தின் கீழ் இது போன்ற போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து நபர்களிடமுள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.