“கபாலி” குழுவின் உறுப்பினர் ஒருவர் கைது!

unnamed 7 1
unnamed 7 1

முல்லைத்தீவில் “கபாலி” குழுவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கத்தியை உடைமையில் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் புதுக்குடியிருப்பு,உடையார்கட்டு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீடுகளை உடைத்து கொள்ளையிடுதல், மதுபோதையில் பெண்களிடம் சேட்டை செய்தல், வீதிகளில் செல்வோரை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “கபாலி” குழுவின் உறுப்பினரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.