கொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

SRI LANKA NAVY 720x400 1

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

21 கடற்படையினர் புதிதாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தமாக இதுவரையில் 811 கடற்படையினர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் இதுவரை 2001 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஆயிரத்து 562 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.